டுபாய் சர்வதேச விமான நிலையம்
குவைட்டில் இருந்து நளீம் நாடு திரும்பிக் கொண்டிருந்தான்.
குவைட்டில் இருந்து டுபாய் வந்து, அங்கிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறி, இலங்கை வந்து சேர வேண்டும். ட்ரான்ஸிட் ப்ளைட்.
பாஸிலை அங்கு சந்திப்போம் என்று நளீம் எதிர்பார்க்கவில்லை. கதாரி எயார்வேஸின் வியாபார வகுப்பில் வந்தானாம்.
ஷார்ஜாவில் இருந்து நேராக டுபாய் வந்து, வேலைகளை முடித்துக் கொண்டு, இரண்டு வாரங்களில் மலேசியா போவானாம்.
எப்படி இருந்தவன்? இப்போது எப்படியாகிவிட்டான்?
என்ன மிடுக்கு? என்ன அகம்பாவம்?
பாஸிலை நினைத்தால், நளீமுக்குப் பொறாமையாகவும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி என்று எத்தனையோ நாடுகளுக்கு இந்த வயதிலேயே போய் வந்து விட்டான்.
மடகஸ்கருக்குக் கூட அண்மையில் போய் வந்ததாக யாரோ சொன்னார்கள்.