Wednesday, 28 June 2017

ஜனரேஷன் கெப் - சிறுகதை

மேற்குத் திசை சிவந்து, வானம் வர்ணமயமாகியிருந்த அந்தி மாலைப் பொழுது....

ஸுஹைர் நானாவின் கடையில் லந்தர் விளக்குப் பற்ற வைக்கப்பட்டாயிற்று....

என்னதான் மின்சாரம் அரசோச்சினாலும், ஸ்மார்ட் போனில் உலகம் ஐக்கியமாகிவிட்ட காலத்தில், இன்னும் கூட எமக்கும் மவுசு இருக்கிறது என்பது போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்த லந்தர் விளக்கு....

அந்தக் கடைதான் அந்த சிறிய பஸாரில் இருக்கின்ற சுப்பர் மார்க்கட். காலையில் சிக்னல் வாங்குவதில் இருந்து, இரவில் நுளம்பு கடித்தால் கொசுவத்தி வாங்குவது வரைக்கும், அவசரமென்றால் பனடோல், சித்தாலேப, கசாயம், மொபைல் கார்ட் வாங்குவது வரைக்கும் என சின்னச் சின்ன சாமான்கள், அவசர சாமான்கள் வாகுவதற்கு மட்டும் நம்பப்பட்டு வந்த கடை.
   

Saturday, 24 June 2017

குறுக்குத்தெரு ஹோட்டல் : அதிகாலைக் கொள்ளை (சிறுகதை)

அதிகாலை நான்கு மணி..!

அலாரம் அலரியது. உயர்ந்தபட்ச அசௌகர்யத்துடன் கண்களை திறக்க முயற்சிக்கிறான். இரவில் காலதாமதத்துடன் படுக்கைக்கு சென்று, அதிகாலையில் நேரகாலத்துடன் கண் விழிப்பதில் உள்ள அசௌகர்யம் அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

போதாததற்கு சில நாட்களாகவே மனசு வேறு சரியில்லை. ஏ லெவல் ரிஸல்ட் வந்ததில் இருந்து, சற்றுப் பிடிப்பற்றுப் போன மனநிலை. முஆத் சுமாராகப் படிப்பவன்.

'இருப்பத்து நான்கு மணி நேரப் படிப்பு' வகையறாவை சேர்ந்தவன் அல்லன். அதற்காக படிப்பையே வெறுத்தொதுக்கி ஊர் சுற்றபவனுமல்லன்.

த்ரீ ஏ எல்லாம் எதிர்பார்ப்பது அவன் படித்தற்கு சற்று கூடுதல் ஆடம்பரம் என்பது முஆதிற்குத் தெரியும். குறைந்தது மூன்று சீயாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால், கடைசியில் வந்து சேர்ந்தது மூன்று எஸ்.
    

நாவு முடிச்சு - சிறுகதை

அது டிசம்பர் மாதம்.

குளிர் காற்று சில்லென்று வீசியது.

கண்டியின் மார்கழி மாதக் குளிர் காற்றும், ஏழு மணி இளம் வெயிலும் உடலுக்கு இதமாக இருந்தது.

பக்கம் பக்கமாய் கவிதை எழுதலாம் வாருங்கள் என்பது போல், கீச்சிட்டப்படியே பல வகைப் பறவைகளும் பறந்து திரிந்து கொண்டிருந்தன.

ஹிஷாமாவின் வீட்டு முற்றம்.

பூவிதழ்களும், பூக்கன்றுகளின் இலைகளும் காலை நேரப் பனித் துளியில் இன்னும் நனைந்திருந்தன.

மூச்சுக் காற்றுடன் சேர்ந்து நீராவியும் வாய் வழியில் புகையாக வெளியானது.

முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி எடுத்தாள் ஹிஷாமா.

முற்றம் கூட்டுவது எவ்வளவு நல்ல உடற்பயிற்சி என்று அனுபவத்தில் கண்டிருக்கிறாள்.

அரை மணி நேரம் முற்றம் கூட்டுவது உடலுக்கும், உள்ளத்துக்கும் புதுத் தெம்பைத் தருவதை அவள் அவதானித்திருக்கிறாள்.

ஏலெவல் முடித்த நாளில் இருந்து, திருமணம் முடித்த பிறகும் கூட, காலை 7.30க்கு முன்பு ஹிஷாமா நிறைவு செய்கின்ற பணிகளில் இதுவும் ஒன்று.