மேற்குத் திசை சிவந்து, வானம் வர்ணமயமாகியிருந்த அந்தி மாலைப் பொழுது....
ஸுஹைர் நானாவின் கடையில் லந்தர் விளக்குப் பற்ற வைக்கப்பட்டாயிற்று....
என்னதான் மின்சாரம் அரசோச்சினாலும், ஸ்மார்ட் போனில் உலகம் ஐக்கியமாகிவிட்ட காலத்தில், இன்னும் கூட எமக்கும் மவுசு இருக்கிறது என்பது போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்த லந்தர் விளக்கு....
அந்தக் கடைதான் அந்த சிறிய பஸாரில் இருக்கின்ற சுப்பர் மார்க்கட். காலையில் சிக்னல் வாங்குவதில் இருந்து, இரவில் நுளம்பு கடித்தால் கொசுவத்தி வாங்குவது வரைக்கும், அவசரமென்றால் பனடோல், சித்தாலேப, கசாயம், மொபைல் கார்ட் வாங்குவது வரைக்கும் என சின்னச் சின்ன சாமான்கள், அவசர சாமான்கள் வாகுவதற்கு மட்டும் நம்பப்பட்டு வந்த கடை.