Saturday, 11 April 2020

சண்டியனும், அந்த நான்கு பேரும் (சிறுகதை)

ஹுஸைன் நானாவின் கோழிப் பண்ணை பற்றி யாரோ ‘சண்டியன்’ ஒருத்தன் முறைப்பாடு கொடுத்திருக்கின்றான்.

இந்த ஊருக்குள் ஹுஸைன் நானாவிற்குள்ள மரியாதைதான் என்ன?

ஸ்டேடஸ்தான் என்ன?

அவரை எப்படி சீண்டிப் பார்க்கலாம்?

சரி, ஹுஸைன் நானாவிற்கு என்ன பிரச்சினை?

எதற்கு இந்தளவு பில்ட் அப்?

யார் இந்த ஹுஸைன் நானா…?

Sunday, 5 April 2020

நிழல் வாழ்கை (சிறுகதை)

டுபாய் சர்வதேச விமான நிலையம்

குவைட்டில் இருந்து நளீம் நாடு திரும்பிக் கொண்டிருந்தான்.

குவைட்டில் இருந்து டுபாய் வந்து, அங்கிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறி, இலங்கை வந்து சேர வேண்டும். ட்ரான்ஸிட் ப்ளைட்.

பாஸிலை அங்கு சந்திப்போம் என்று நளீம் எதிர்பார்க்கவில்லை. கதாரி எயார்வேஸின் வியாபார வகுப்பில் வந்தானாம்.

ஷார்ஜாவில் இருந்து நேராக டுபாய் வந்து, வேலைகளை முடித்துக் கொண்டு, இரண்டு வாரங்களில் மலேசியா போவானாம்.

எப்படி இருந்தவன்? இப்போது எப்படியாகிவிட்டான்?

என்ன மிடுக்கு? என்ன அகம்பாவம்?

பாஸிலை நினைத்தால், நளீமுக்குப் பொறாமையாகவும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி என்று எத்தனையோ நாடுகளுக்கு இந்த வயதிலேயே போய் வந்து விட்டான்.

மடகஸ்கருக்குக் கூட அண்மையில் போய் வந்ததாக யாரோ சொன்னார்கள்.
   

Friday, 27 March 2020

சிறுகதை : நூற்றாண்டு விழா


“மச்சான், புரோக்ராம்ல நல்லா பேசுவாய்தானேடா..?”.

“மச்சான், இவன் மாற ஆள்டா. ஸ்டேஜ்ல பேசியே எல்லாரயும் மடக்குவான் போல..!”.

நண்பர்களின் உட்சாகமூட்டல்கள், கிண்டல்கள் ...
"ருஹைம், ஸ்பீச் ரெடியா?" பஷீரா டீச்சர் கேட்டார்.

“ஓ டீச்சர்,....”

“நெறயப் பேர் அந்தக் கூட்டத்துல பேசணும் என்டு ஆசப்பட்றாங்க. அதனால ஒரு ரிஹர்ஸல் இருக்குது. எட்டு அறக்கி மாதி அஸ்ஸம்ப்லி ஹோலுக்கு வாங்க”.

கல்லூயின் நூற்றாண்டு விழா இன்னும் சில நாட்களில் இடம்பெற இருந்தது. நூற்றாண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் மாணவர்கள் சார்பாக ‘பிராந்தியக் கல்வியில் நமது பாடசாலையின் பங்கு’ என்ற தலைப்பில் ருஹைம் பேச வேண்டியிருந்தது.

பிரதமரில் இருந்து, வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஓரிருவர் உள்ளடங்கலாக, பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொள்ள இருந்தனர்.
    

Tuesday, 24 March 2020

ட்ரெஸ்ஸிங் சென்சும், பெமிலி சென்சும் (சிறுகதை)

அன்று ஞாயிற்றுக் கிழமை.

அழகிய கண்டி நகருக்கு விடுமுறை.

ஆனால், கல்வித் துறைக்கு ஞாயிறு தினம் கூட விடுமுறையில்லை. அது மலையகத்தின் பட்டி, தொட்டிகளில் இருந்து மாணவர் கூட்டம் கண்டி நகருக்கு படையெடுத்து, நகரை ஆக்கிரமிக்கின்ற நாள்.

கண்டி வாவி.

கண்டி நகரின் இதயத்திற்கு அழகு சேர்க்கும் அலங்காரங்களுள் ஒன்று.

கண்டிய மன்னர்கள் காலத்தில் அழகுக்காக மட்டுமன்றி, பாதுகாப்பு அரணாகவும் கூட அதனை அமைத்திருக்கிறார்கள்.

இப்போது அது கண்டிக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது.

மாளிகா ஹோல்டில் இறங்கிய ரிப்காவிற்கு, வாவியை சுற்றி நடப்பது உடலுக்குத் தெம்பாக இருக்கும் போல் தோன்றியது. வாவி அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும், சிறிய சிறிய அலைகள் அவ்வப்போது ஆங்காங்கே எழுந்த வண்ணமே இருந்தன. இதமான குளிர்ந்த காற்றை சுமந்து வந்து, ரிப்காவிற்கு அணிவித்தன.

நேரம் ஏழறைக்கும் எட்டு மணிக்கும் இடையில் இருக்கலாம்.

வாவிக் கரையில் சுதந்திரமாக காற்று வாங்கலாம் போல் தெரிந்தது. பெரிதாக வாவிக் கரையில் ஜனநடமாட்டம் இல்லை. களைத்திருந்த ரிப்காவின் உடலுக்கும், மனதுக்கும் அந்த வாவிக் காற்று இதம் தந்தது.

கைத்தொலைபேசி சிணுங்கியது.

“எங்க டீ ஈக்குறாய்….?” நண்பி சிதாராவின் குரல்.